Know about Subramanya Bharathi!
Home > புதிய பாடல்கள் > தனிமை இரக்கம்
தனிமை இரக்கம்
Mar
26

குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழுதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடைக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயிலையிற் றென்றெவர் வகுப்புரங் கவட்கே?
...... . . . . .
நவீனக் கவிதையின் பின்புலம் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்தே உருவானது. ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைக்கான கருத்தமைவுகளும் இந்த மனோபாவத்திலிருந்தே வெளியாகியுள்ளன என்பது இயல்பானது. காதல் அடுத்தவன் பிரச்சினையாக இருக்கும்போது ரசிக்கத் தகுந்த ஒன்றெனவும் தன்னுடையதாக வரும்போது ரகசியமாகக் காப்பாற்ற வேண்டிய பிரமாணம் எனவும் இந்த மனோபாவம் வற்புறுத்துகிறது. எனவே, காதலியின் அடையாளங்களையோ, குறைந்தபட்சம் பெயரையோகூட வெளிப்படுத்துவது அத்துமீறலாகிறது. அதனால் கவிதைப் பெண்கள் பெரும்பான்மையும் மனைவியின் சாயலிலோ நிழலிலோ ஒண்டிக்கொள்கிறார்கள். தமிழில் இன்றளவும் ஆகச் சிறந்த காதல் கவிதைகளை எழுதிய பாரதியின் கண்ணம்மாகூட அவரது மனைவி செல்லம்மாளின் முகமூடியுடன்தான் நமக்கு அறிமுகமாகிறாள்.
பாரதி கவிதைகளை அடிப்படையாக வைத்து அவரது வாழ்க்கையை அவரது வாய்மொழியாகப் பதிவு செய்ய முயன்ற முத்துக்கிருஷ்ணனின் வரலாற்று நூலில் (என்.சி.பி.எச். வெளியீடு) கண்ணம்மா என்பது செல்லம்மாள் அல்லவென்றும் பாரதியின் பிள்ளைப் பிராயத் தோழியென்றும் குறிப்பிட்டிருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே படுகிறது. அச்சில் வெளிவந்த அவரது முதல் கவிதையான 'தனிமை இரக்கம்' காதலும் காமமும் பிணைந்தது. பதினாலரை வயதில் திருமணம் முடித்த இளைஞனுக்குப் பதினெட்டு வயதில் இரு தள அனுபவமும் சாத்தியம். எனினும் மேற்சொன்ன வாழ்க்கை வரலாற்றை வாசித்தது முதல் இதில் காதலின் சொல்லப்படாத ரகசியம் புதைந்திருப்பதாக நம்ப மனம் விரும்புகிறது. பதினான்கு வயது நிறைவுபெறும் முன்பே திருமணம். மறு ஆண்டில் தந்தை மரணம். அதைத் தொடர்ந்து காசிக்குப் போகும் பாரதி மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டுச் செல்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு ஊர் திரும்பிய பின்னர்தான் குல வழக்கப்படி சாந்தி முகூர்த்தம் நடைபெறுகிறது. 'தனிமை இரக்கம்' கவிதை அதற்கு அடுத்த ஆண்டில் (1904) வெளியாகிறது. பிரிவாற்றாமைதான் கவிதையின் கரு. அது மனைவியைப் பிரிந்த நாட்களின் மனவோட்டமாகவே இருக்கலாம். அல்லது மனத்துக்குள் பதிந்துபோன பெண்ணின் நினைவுகூரலாக இருக்கலாம். இரண்டாவதே பொருத்தம் என்று தோன்றுகிறது. அப்படி நம்புவதற்கான ஆதாரங்கள் கவிதைகளிலேயே தென்படுகின்றன.
பாரதியின் காதல் கவிதைகளில் இணைவிழைவின் தவிப்புகளும் குதூகலங்களும் அதிகம். இந்தக் காதலின் அடிவேர்கள் பக்தியிலும் ஆன்மீக விசாரங்களிலும் படர்ந்திருப்பதால் காமத்தின் ஆவேசம் குறைவு. முன்னதை லட்சியக் காதலின் உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த நிலையில் 'பங்கமில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்'. அதுவே நிறைவு. இரண்டே இரண்டு கவிதைகளில் மட்டும் காமத்தின் பெருங்கடல் கொந்தளிக்கிறது. அவை 'தனிமை இரக்க'மும் 'எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி' என்ற வள்ளிப்பாட்டும். இவற்றில் காதல் முற்றிக் காமம் பீறிடுகிற மனச் சஞ்சாரத்தைப் பார்க்கலாம். 'வட்டங்களிட்டும் குளமகலாத தெப்பத்தைப்போல' நிறைவு தேடி அலைந்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வரம்புகளுக்குள் தமிழின் காதல் கவிதைகளை அடக்கிவிடலாம். காதலியையோ மனைவியையோ கவிதையில் சித்தரிக்கும்போது தமிழ்க் கவிஞர்கள் கனவான்கள்; உடல் துய்ப்பின்போது ஆதிமனவாசிகள்.
நன்றி : காலச்சுவடு
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | |
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- பாரதியார் - பாரதி யார்?
- பாரதி அறுபத்தாறு
- தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
- வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
- நாம் என்ன செய்வோம்
- நடிப்பு சுதேசிகள்
- பாரத தேவியின் அடிமை
- நம்ம ஜாதிக் கடுக்குமோ
- தொண்டு செய்யும் அடிமை
- கோக்கலே சாமியார் பாடல்
- சத்ரபதி சிவாஜி
- விநாயகர் நான்மணி மாலை
- பாரதி கவிதைகள் - பொருளடக்கம்
- சுதந்திரப் பள்ளு
- விடுதலை
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...


பாரதி பிரியர்கள் கூறியவை... | ![]() |


-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading

1 comments:
இக்கவிதையின் விளக்கமும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Post a Comment