மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
enbharathi-crome-extension
மகிழ்ச்சியான செய்தி!

பாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது!
Know about Subramanya Bharathi!
Add to Google
என் பாரதி, எனக்குப் போதும் !
enbharathi-crome-extension

பாரத மாதா



என் பாரதி : பாரத மாதா
தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.


முன்னை இலங்கை அரக்கர் அழிய 
முடித்தவில் யாருடை வில்? - எங்கள் 
அன்னை பயங்கரி பாரத தேவி நல் 
ஆரிய ராணியின் வில். 


இந்திர சித்தன் இரண்டு துண்டாக 
எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள் 
மந்திரத் தெய்வம் பாரத ராணி, 
வயிரவி தன்னுடைய வில். 


ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் 
உலகின்பக் கேணி என்றே - மிக 
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத 
நாயகி தன்திருக் கை. 


சித்த மயமிவ் உலகம் உறுதி நம் 
சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம் 
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் 
ஆரிய ராணியின் சொல். 


சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் 
தட்டி விளையாடி - நன்று 
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி 
ஒளியுறப் பெற்ற பிள்ளை. 


காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது 
கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை 
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் 
ஆரிய தேவியின் தோள். 


சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் 
தந்த தெவர் கொடைக்கை? - சுவைப் 
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் 
பாரத ராணியின் கை. 


போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை 
புகன்ற தெவருடை வாய்? - பகை 
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத 
தேவிமலர் திரு வாய். 


தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும் 
தையலர் தம்முறவும் - இனி 
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது 
எம் அனை செய்த உள்ளம். 


அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் 
அன்பினிற் போகும் என்றே - இங்கு 
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் 
மொழி எங்கள் அன்னை மொழி. 


மிதிலை எரிந்திட வேதப் பொருளை 
வினவும் சனகன் மதி - தன் 
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது 
வல்ல நம் அன்னை மதி. 


தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம் 
செய்த தெவர் கவிதை? - அயன் 
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத 
தேவி அருட் கவிதை. 

0 comments:

Post a Comment

பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.
பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.
En Bharathi
நன்றி:http://singgingg.blogspot.com
.

பாரதி பிரியர்கள்..

enbharathi-crome-extension

பாரதி படித்தோர் எண்ணிக்கை:
பாரதி பிரியர்கள் கூறியவை...

உங்கள் iGoogle-ல், என் பாரதி


Add to Google

இணைப்பு கொடுக்க

Read Bharathi Kavithaigal with songs and translation!பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!


EnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.





பாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:


  • தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று-பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
    வாடித் துன்பமிக உழன்று-பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து- நரை
    கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
    வேடிக்கை மனிதரைப் போலே-நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ?
    Translated Continue Reading
  • நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி; - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன்
                  படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி!
    
    Translated
    
    Continue Reading
  • கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை 
                               - கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத 
                       தொல்லை. (தீராத)
    
    1. தின்னப் பழங்கொண்டு தருவான்; 
                                - பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால்..
    Continue Reading