Know about Subramanya Bharathi!
பாரத மாதா
Dec
19
தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.
முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்? - எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில். இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள் மந்திரத் தெய்வம் பாரத ராணி, வயிரவி தன்னுடைய வில். ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே - மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை. சித்த மயமிவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம் அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் ஆரிய ராணியின் சொல். சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் தட்டி விளையாடி - நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை. காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவியின் தோள். சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் தந்த தெவர் கொடைக்கை? - சுவைப் பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கை. போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை புகன்ற தெவருடை வாய்? - பகை தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத தேவிமலர் திரு வாய். தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும் தையலர் தம்முறவும் - இனி இந்த உலகில் விரும்புகி லேன் என்றது எம் அனை செய்த உள்ளம். அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் அன்பினிற் போகும் என்றே - இங்கு முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி. மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி - தன் மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி. தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம் செய்த தெவர் கவிதை? - அயன் செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட் கவிதை.
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | |
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- பாரதியார் - பாரதி யார்?
- பாரதி அறுபத்தாறு
- தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
- வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
- நாம் என்ன செய்வோம்
- நடிப்பு சுதேசிகள்
- பாரத தேவியின் அடிமை
- நம்ம ஜாதிக் கடுக்குமோ
- தொண்டு செய்யும் அடிமை
- கோக்கலே சாமியார் பாடல்
- சத்ரபதி சிவாஜி
- விநாயகர் நான்மணி மாலை
- பாரதி கவிதைகள் - பொருளடக்கம்
- சுதந்திரப் பள்ளு
- விடுதலை
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...


பாரதி பிரியர்கள் கூறியவை... | ![]() |


-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading

0 comments:
Post a Comment