Know about Subramanya Bharathi!
Home > தோத்திரப் பாடல்கள் > மஹாசக்திக்கு விண்ணப்பம்
மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருவுலகம் - இங்குள்ளன
யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு;
இந்தப் பதர்களையே - நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.
உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? - அம்மா ! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
வில்லற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே !
Tuesday, March 24, 2009
 | 
Labels:
தோத்திரப் பாடல்கள்
 | 
 
 
Subscribe to:
Post Comments (Atom)
![]()  | 
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.  | 
![]()  | |
| நன்றி:http://singgingg.blogspot.com | |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
 - Translated
 - கண்ணன் பாட்டு
 - குயில் பாட்டு
 - சுதந்திரம்
 - ஞானப் பாடல்கள்
 - தமிழ் நாடு
 - தனிப் பாடல்கள்
 - தெய்வப் பாடல்கள்
 - தேசிய இயக்கப் பாடல்கள்
 - தேசிய கீதங்கள்
 - தோத்திரப் பாடல்கள்
 - பலவகைப் பாடல்கள்
 - பாரத நாடு
 - பாரதி குறித்து..
 - பாரதி வாழ்க்கை
 - புதிய பாடல்கள்
 - பொருளடக்கம்
 - முப்பெரும் பாடல்கள்
 - வாழ்க்கை குறிப்பு
 
Know about Bharathi...
பாரதி படித்தோர் எண்ணிக்கை:
| பாரதி பிரியர்கள் கூறியவை... |  
 | 

- 
			
			தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading - 
			
			நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! TranslatedContinue Reading - 
			
			கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..Continue Reading 






2 comments:
http://www.youtube.com/watch?v=t-NrmV3z_g0&feature=PlayList&p=2EC58724F4206917&index=1
http://www.youtube.com/watch?v=t-NrmV3z_g0&feature=PlayList&p=2EC58724F4206917&index=1
Post a Comment