Know about Subramanya Bharathi!
Home > தெய்வப் பாடல்கள் > 1. அச்சமில்லை
1. அச்சமில்லை
தெய்வப் பாடல்கள்
ஞானப்பாடல்கள்
1. அச்சமில்லை
பண்டாரப் பாட்டுஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
1
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
2
Thursday, April 23, 2009
 | 
Labels:
ஞானப் பாடல்கள்
,
தெய்வப் பாடல்கள்
 | 
 
 
Subscribe to:
Post Comments (Atom)
![]()  | 
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.  | 
![]()  | |
| நன்றி:http://singgingg.blogspot.com | |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
 - Translated
 - கண்ணன் பாட்டு
 - குயில் பாட்டு
 - சுதந்திரம்
 - ஞானப் பாடல்கள்
 - தமிழ் நாடு
 - தனிப் பாடல்கள்
 - தெய்வப் பாடல்கள்
 - தேசிய இயக்கப் பாடல்கள்
 - தேசிய கீதங்கள்
 - தோத்திரப் பாடல்கள்
 - பலவகைப் பாடல்கள்
 - பாரத நாடு
 - பாரதி குறித்து..
 - பாரதி வாழ்க்கை
 - புதிய பாடல்கள்
 - பொருளடக்கம்
 - முப்பெரும் பாடல்கள்
 - வாழ்க்கை குறிப்பு
 
Know about Bharathi...
பாரதி படித்தோர் எண்ணிக்கை:
| பாரதி பிரியர்கள் கூறியவை... |  
 | 

- 
			
			தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading - 
			
			நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! TranslatedContinue Reading - 
			
			கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..Continue Reading 






0 comments:
Post a Comment