Know about Subramanya Bharathi!
Home > முப்பெரும் பாடல்கள் > கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்
கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்

![]()  | 
கண்ணன் - என் காதலன் - (வேறு)
(பாங்கியைத் தூது விடுத்தல்)
தங்கப் பாட்டு மெட்டு
ரஸங்கள் : சிருங்காரம், ரெளத்ரம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே - தங்கம்.
1
கன்னிகை யாயிருந்து தங்கமே - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம் ;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்.
2
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம் ;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான் ? - அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ !
3
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.
4
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.
5
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ !
6
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் ;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.
7
நேர முழுதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் ;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம் !
8
Friday, April 03, 2009
 | 
Labels:
♫ இசையோடு..
,
கண்ணன் பாட்டு
,
முப்பெரும் பாடல்கள்
 | 
 
 
Subscribe to:
Post Comments (Atom)
![]()  | 
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.  | 
![]()  | |
| நன்றி:http://singgingg.blogspot.com | |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
 - Translated
 - கண்ணன் பாட்டு
 - குயில் பாட்டு
 - சுதந்திரம்
 - ஞானப் பாடல்கள்
 - தமிழ் நாடு
 - தனிப் பாடல்கள்
 - தெய்வப் பாடல்கள்
 - தேசிய இயக்கப் பாடல்கள்
 - தேசிய கீதங்கள்
 - தோத்திரப் பாடல்கள்
 - பலவகைப் பாடல்கள்
 - பாரத நாடு
 - பாரதி குறித்து..
 - பாரதி வாழ்க்கை
 - புதிய பாடல்கள்
 - பொருளடக்கம்
 - முப்பெரும் பாடல்கள்
 - வாழ்க்கை குறிப்பு
 
Know about Bharathi...
பாரதி படித்தோர் எண்ணிக்கை:
| பாரதி பிரியர்கள் கூறியவை... |  
 | 

- 
			
			தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading - 
			
			நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! TranslatedContinue Reading - 
			
			கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..Continue Reading 







1 comments:
Please read my article on this song at the URL
http://periscope-narada.blogspot.com/2014/09/kannan-mananilaiyait-tangame-tangam.html
Post a Comment